வாழ்வின் வளமைக்கு ’லூயிஸ் ஹே’ தரும் கருத்தேற்றம்

வாழ்வின் வளமைக்கு ’லூயிஸ் ஹே’ தரும் கருத்தேற்றம்
( LOUISE L HAY’s AFFIRMATION for PROSPERITY)

  • ’’நான் இருக்கும் இந்த எல்லையற்ற வாழ்வில் எல்லாம் ஒழுங்காகவும்,முழுமையாகவும், நிறைவாகவும் இருக்கின்றன.
  • என்னைப் படைத்த சக்தியோடு நான் சேர்ந்தே இருக்கிறேன்.
  • பிரபஞ்சம் வழங்கும் வளமைப் பெருக்கத்தை அப்படியே உள்வாங்குவதற்குத் திறவாய் இருக்கிறேன்.
  • நான் கேட்பத்ற்கு முன்பே என் தேவைகளும் ஆசைகளும் பூர்த்தியாகின்றன.
  • தெய்வத்தின் பாதுகாப்பும் வழிகாட்டுதலும் எனக்கு இருக்கிறது.
  • எனக்கு நன்மை அளிப்பனவற்றையே நான் தேர்வு செய்கிறேன்.
  • எல்லோருக்கும் நிறையவே கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்
  • என்னுள் வளமை உணர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை பிரதிபலிக்கும் விதமாக என் வருமானம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
  • எல்லா திசையிலிருந்தும் எல்லோரிடமிருந்தும் எனக்கு நன்மைகள் வந்து சேருகின்றன.
  • என் உலகில் எல்லாம் சரியாகவே இருக்கின்றன.’’

 

( மேற்கண்ட வாக்கியங்களை 21 நாளைக்கு தினமும் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டால் எண்ணம் வலிமை பெற்று வாழ்வு சிறக்கும் என்பது உறுதி)

 

லூயிஸ் ஹே என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாவின் வாயிலிருந்து தன்னைத் தானே மீட்டெடுத்த வழிமுறையை பயிற்சி வகுப்புகள் மூலம் பகிர்ந்து வருகிறார்.

அவரது வளைதளம்   http://www.louisehay.com/