NLP

என்.எல்.பி-யால் யார் பயனடையலாம்?

NLP

NLP

என்.எல்.பி யால் யார் பயன் பெறலாம்? 

ª       மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருமே பயன் பெறலாம்

ª       பிரச்சனைகள் உள்ளவர்கள் என்று மட்டுமின்றி உடல் மன ஆரோக்கியத்துடன் உள்ளவர்களும் பயன் பெறலாம்

ª       தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமை ஆனோர், யாரும் பயன் பெறலாம்.

ª       வசீகரிக்கும் பேச்சுக் கலையை வளர்த்துக்கொள்ள விரும்புவோர்,

ª       நட்பு, சொந்தங்களோடு நல்லுறவு கொள்ள விரும்புவோர்,

ª       தன்னைத் தான் மேம்படுத்திக் கொள்ள விரும்புவோர்

ª       கடந்த கால கசப்புகளின் நினைவுகளிலிருந்து மீள விரும்புவோர்

ª       நடப்பு வாழ்க்கையின் நல்ல விஷயங்களை முறையாகப் பயன் படுத்தி முன்னேற விரும்புவோர்

ª       ஒரு அழகிய எதிர்காலத்தை அமைக்க ஆசைப்படுவோர்

பெற்றோர்கள் பெற்றோர்கள் சிந்தனைப் பாங்கு சிந்தனைத் திறன், சிந்தனையின் சாத்தியங்களை புரிந்து கொள்வதால், பிள்ளைகளோடு ஆக்கபூர்வமாக உறவாடி, அவர்களின் நம்பிக்கையை பெற்று நல்ல வழிகாட்டியாக அமைய முடியும். குடும்பத்தில் உறவு இன்னும் நெருக்கமாக ஆகும்.

பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் – மாணவர்களோடு இணக்கமாக இருப்பது எப்படி? மாணவர்கள் கற்கும் முறை உள்வாங்கும் முறை ஆகியவற்றை அறிந்து வகுப்புகளை நடத்தலாம்,

மாணவர்கள்கற்கும் முறை, நினைவாற்றல் பயிற்சி, விருப்பமில்லா பாடத்தில் விருப்பம் ஏற்படுத்துதல், தேர்வு பயம் போக்கி அதிக மதிப்பெண் பெற வழி செய்தல் என என்.எல்.பி உதவும்

மனநல ஆலோசகர்கள் : என்.எல்.பி ஆற்றுப்படுத்தும் முறை பாதுகாப்பானது. பிரச்சனையை தோண்டி ஆராய வேண்டியதில்லை. பிரச்சனை உள்ளவருக்கு தீர்வை சொல்லும் வழிகளை சொல்கிறது.

எனவே மன நல ஆலோசக்கர்களும் தங்களின் மன நலனை உற்சாகத்தை இழக்காமல் தக்க வைத்து கொள்ள் முடியும். சிக்கலுக்கான தீர்வையும் விரைவில் தரும்.

உடல் நல மருத்துவர்கள் —   நோயுற்று வருவோரின் உள்ளப்பாங்கையும் புரிந்து கொண்டு, இணக்கமாக இருந்து நோய்க்கான தீர்வை பக்குவமாக எடுத்து சொல்ல வழி சொல்லும்.

வியாபாரிகள், நிர்வாகிகள்உற்சாக மனநிலையில் தொழிலை கவனிக்கும் சக்தி, வாடிக்கையளர்கள் சக ஊழியர்களுடன் சகஜமாக இருத்தல்,இணக்கமாக இருத்தல், புரியும்படி பேசுதல், தெளிவாக் கட்டளை பிறப்பித்தல்,திட்ட மிட்டு செயல் படும் திறன், இலக்குகளை எளிதில் அடையும் சூசகம் என பல நல்ல அம்சங்களை என்.எல்.பி தருகிறது

 விற்பனையாளர்கள்வாடிக்கையளர்களின் வாங்கும் ஆர்வம், முடிவெடுக்கும் பாங்கு, ஆகியவற்றை அறிய முடியும், வாடிக்கையளர்களை எளிதில் நட்புறவு கொள்ள செய்ய முடியும்.
நமக்கு நாமே’ – என்.எல்.பி மனத்துக்கான சுய வழிகாட்டி. எனவே என்.எல்.பி உத்திகளை தானே பயிற்சி செய்து வாழ்வின் சிக்கல்களுக்கு விடை கண்டுபிடிக்க முடியும். ஒரு தனி நபர் சுய சார்பில் சிறந்து விளங்கி வாழ்வில் மகிழ்ச்சியை கூட்டிக் கொள்ள முடியும்

சவால்களை சந்திக்கும் ஆர்வமும், மாற்றத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கும் திறந்த மனமும் வாழ்க்கையயும் அது தரும் வாய்ப்புகளையும் ரசிக்கும் மனநிலையும், ருசிக்கும் மனோபாவமும் உள்ளவர்களுக்கு என்.எல்.பி பல விஷயங்களை அள்ளித்தரும்.